யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகள் மரணம்

யாழில். பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்
– தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயாரும் மரணம்

யாழ். விசேட நிருபர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , இரட்டை குழந்தைகளும் உயிரிழந்திருந்தன. அந்நிலையில் தாயார் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயாரும் சிகிச்சை பலனின்றி நேற்று (26) உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 28 வயதான நிமலராஜ் சாருமதி எனும் தாயாரே உயிரிழந்துள்ளார்.

தாயாரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top