மூதூரில்படகு மூழ்கி ஒருவர் காணவில்லை


மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பி வரும் போது படகு ஒன்று மூழ்கியதில், மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் என்ற நபர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த படகில் இரு மீனவர்கள் சென்றிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காணாமல் சென்ற நிலையை  நிலையில்  மற்றொரு மீனவர், மிதக்கும் கலன் உதவியுடன் மிதந்து மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்தில் காணாமல் சென்றவரே தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top