தலைநகரம் கம்பாலாவிற்கும் உகாண்டாவின் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் மொத்தம் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு பேருந்துகளும் பல கார்களுடன் மோதியதில் பலர் காயமடைந்ததாகஅந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகளும் பல கார்களைக் கடந்து செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உகாண்டா விபத்தில் 63 பேர் பலி



