2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் தற்போது மும்பையில் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு 299 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்இந்தியா, தென்னாபிரிக்காவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு



