பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள்!

இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று இன்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது.

அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான ‘C-130’ விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top