Ameerkhan

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், […]

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும் Read More »

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும் Read More »

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை

கவனம் செலுத்தப்பட்டது. இதனிடையே, 2016 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட காப்புறுதி முறைமையில், அரசாங்கத்திற்கு 5.79 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இந்தநிலையில், இந்த காப்புறுதி முறைமையை மீண்டும் ஆரம்பிப்பதாயின், அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும் பயனாளிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய, நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சித்

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை Read More »

ரயிலில் செல்லும் மாணவர்களுக்கான அறிவிப்பு

நவம்பர் மாதத்திற்கான புகையிரத பாடசாலை பருவகால சீட்டைப் (Season Ticket) பயன்படுத்தி, டிசம்பர் மாதத்தில் பாடசாலை நடைபெறும் நாட்களில் ரயிலில் பயணிப்பதற்கான அனுமதியை இலங்கை ரயில்வே திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. அனர்த்தங்களினால் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக சில பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025 டிசம்பர் மாதத்திற்கான பாடசாலை பருவகால சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதனை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் செல்லும் மாணவர்களுக்கான அறிவிப்பு Read More »

புத்தளம் மாநகர சபையிலும் NPP வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 12 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஓர் உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டதுடன், இதற்கமைய புத்தளம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட், வரவு செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக

புத்தளம் மாநகர சபையிலும் NPP வரவு செலவுத் திட்டம் தோல்வி Read More »

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி சப்புகஸ்கந்த பகுதியில் இன்று (11) இரவு விபத்து இடம்பெற்றுள்ளது. இரவு 7.45 மணியளவில் சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காரில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அதற்கமைய பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம் விபத்து Read More »

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி Read More »

கற்பிட்டியில் ஐஸ் மீட்பு தொடர்பில் நால்வர் கைது

கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கற்பிட்டி இப்பன்தீவு கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, 63.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 14.5 கிலோகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது. இதனிடையே, போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் கடந்த

கற்பிட்டியில் ஐஸ் மீட்பு தொடர்பில் நால்வர் கைது Read More »

யாழ்ப்பாணம் பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்குப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், சுமார் 12 பரப்பளவு காணியைக் கையகப்படுத்தி, உள்ளக விளையாட்டரங்கு அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது. கடந்த 23ஆம் திகதி

யாழ்ப்பாணம் பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்குப் பணிகள் நிறுத்தம் Read More »

பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள்!

இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று இன்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது. அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான ‘C-130’ விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப்

பங்களாதேஷிடமிருந்தும் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள்! Read More »

கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல்

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக முன்னதாக குறித்த வீதி கனேதென்ன பகுதியில் மூடப்பட்டிருந்தது. பின்னர் ஒரு வழி பாதையாக திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் அந்த வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல் Read More »

வாகங்களின் விலை குறைவடைந்துள்ளதாக – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இன்று (26) முற்பகல் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார

வாகங்களின் விலை குறைவடைந்துள்ளதாக – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் Read More »

கடுகன்னாவ மண்சரிவு – NBRO பரிந்துரையுடன் அறிக்கை

கீழ் கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அப்பகுதிக்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நிரந்தரத் தீர்வுகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே வீதியை மீண்டும் திறக்க முடியும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்

கடுகன்னாவ மண்சரிவு – NBRO பரிந்துரையுடன் அறிக்கை Read More »

Scroll to Top