பொது நிர்வாக அமைச்சு
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கிய அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க தீர்மானம் – பொதுநிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கிய அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க தீர்மானம் – பொதுநிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
உலகின் மிகப் பெரிய விமான நிலையமாக கின்னஸில் இடம் பெற்றுள்ளது தம்மாம் கிங் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் சர்வதேச விமான முனையம். எந்தளவுக்கு விரிவானது என்றால் பஹ்ரைன் நாட்டை விட பெரிய நிலப்பரப்பு கொண்டது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
தனது ஐநா சபை உரையில், சுதந்திர பாலஸ்தீன ராஜ்ஜியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கொலம்பியாவின் அதிபர் பெட்றோவின் வீசாவை உடனடியாக ரத்து செய்யவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
“ஏற்கனவே இடிஞ்சு தரைமட்டமாகி இருக்குற இடத்தை இன்னும் தாக்கிக்கிட்டு இருக்குறதுக்கு எந்த ராணுவ காரணமும் இல்லை”. -முன்னாள் அதிபர் ஒபாமா நேற்று(26) வெள்ளிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கையை விமர்சித்து, “ஏற்கனவே இடிபாடுகளாக இருப்பதைத் தொடர்ந்து தாக்குவதற்கு இராணுவ ரீதியான காரணம் இல்லை” என்றும், பாலஸ்தீன அரசுக்கான உரிமைக்காக வாதிடுகிறார் என்றும் கூறினார். “வன்முறையில் நேரடி பங்குதாரர்களாக இல்லாத நம்மில், குழந்தைகள் இப்போது பட்டினியால் வாட முடியாது என்பதை ஒப்புக்கொள்வது
யாழில். பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்– தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயாரும் மரணம் யாழ். விசேட நிருபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , இரட்டை குழந்தைகளும் உயிரிழந்திருந்தன. அந்நிலையில் தாயார் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயாரும் சிகிச்சை பலனின்றி நேற்று (26) உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 28 வயதான நிமலராஜ் சாருமதி எனும் தாயாரே உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கீ ஜம்பிங்கை (bungee jump) அறிமுகப்படுத்தவுள்ளது. கட்டமைப்பு பொறியாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது. தாமரை கோபுர மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் கூறுகையில், இந்த முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு
*இலங்கையின் தாமரை கோபுரத்தில் அறிமுகமாகவுள்ள பங்கீ ஜம்பிங்* Read More »
செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் அன்று (26) வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட 602,852 முதியோருக்காக ரூ. 3,01,42,60,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து பயனாளிகள் தங்கள் முதியோர் உதவித்தொகையை தொடர்புடைய பயனாளி வங்கிக் கணக்கு மூலம் பெற முடியுமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் (25) பிற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை சென்றடைந்த ஜனாதிபதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மரியாதையுடன் வரவேற்றதுடன், பின்னர் அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர். இலங்கையின்
ஜனாதிபதிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு Read More »
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரிய வேதம் பூலாக்காடு கிரான் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள சீல்லிக்கொடி பகுதியில்
வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்றவர் யானை தாக்குதலில் உயிரிழப்பு– Read More »
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ‘இஸ்ரேலிய’ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு செல்வதற்கு“வழக்கத்திற்கு மாறான” விமானப் பாதையை எடுத்து, பல ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியைத் தவிர்த்து #அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபைக்கு அழைத்துச் சென்ற விமானம் பிரெஞ்சு வான்வெளியைத் தவிர்த்து, கிரீஸ் மற்றும் இத்தாலி மீது மட்டுமே பறந்ததாக விமான கண்காணிப்பாளர்கள் காட்டுகின்றனர். அக்டோபர் 2023 முதல் காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு
13 பிக்குகள் பயணித்த கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7 பிக்குகள் உயிரிழப்பு!மெல்சிறிபுரவில் சம்பவம்! மெல்சிரிபுர நா உயான ஆரண்ய சேனாசனத்தில் 13 துறவிகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் கம்பி அறிந்து விழுந்ததில் ஏழு துறவிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இறந்த துறவிகளில் இரண்டு ரஷ்ய துறவிகளும் ஒரு கம்போடிய துறவியும் அடங்குவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
“ஊழலுக்கு எதிரான போராட்டம் பயங்கரமானது. ஆனால், ஊழலை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது.. “ நியூயோர் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு குறிப்பிட்டார்.