கர்ப்பிணித் தாய்மார்கள் 1,60,200 பேருக்கு ரூ. 5000 பெறுமதியான சத்துணவு பொதிகள்எதிர்வரும் டிசம்பர் முதல் 10 மாதங்களுக்கு வழங்க ஏற்பாடு
அரசு 1,500 மில். ரூபா ஒதுக்கியுள்ளதாக பாராளுமன்றில் அமைச்சர் சரோஜா சாவித்திரி நேற்று தெரிவிப்பு நாட்டிலுள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து இருநூறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். […]













