Ameerkhan

மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒக்டோபர் மாதம் என்றாலே நோபல் பரிசு காலம் என்று பொருளாகும், ஆறு நாட்கள், ஆறு பரிசுகள் அறிவிக்கப்படும். அந்தவகையில் 2025 ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த […]

மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு Read More »

முககக்கவசம் அணிந்து வந்த ஐவர் வீடு புகுந்து இருவரைக் கொலை செய்த சம்பவம்.  (நண்பனின் மனைவியுடன் இருந்த வேளையில் சம்பவம்.

வாடிகல, ரன்ன பகுதியில் உள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது. ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இன்று (07) அதிகாலை ஒரு ஆணும் பெண்ணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலங்களாக காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. மரணித்தவர் தனது நண்பரின் வீட்டில் அவரது மனைவியுடன் தங்கியிருந்தபோது, முகக்கவசம் அணிந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி கொலை செய்துள்ளதாக

முககக்கவசம் அணிந்து வந்த ஐவர் வீடு புகுந்து இருவரைக் கொலை செய்த சம்பவம்.  (நண்பனின் மனைவியுடன் இருந்த வேளையில் சம்பவம். Read More »

அம்பாறையில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த மக்கள் ! ஆசை காட்டி பண மோசடி செய்து ஏமாற்றிய ஜோடி தலைமறைவு

அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, பன்னல்கம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அருணலு பஹன்சிலு என்ற பெயரில் விளக்கு திரிகளை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இது ஒரு பத்தி தயாரிக்கும் தொழிலாகத் தொடங்கப்பட்டது, மேலும் கிராம மக்களுக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவர் ரூ. 50,000 தொகையை வைப்பீடு செய்யும்போது, அவர்களுக்கு

அம்பாறையில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த மக்கள் ! ஆசை காட்டி பண மோசடி செய்து ஏமாற்றிய ஜோடி தலைமறைவு Read More »

கஜ்ஜா அடையாளம் காணப்பட்டுள்ளார்

12 வருடங்களாக அடையாளம் காண முடியாதிருந்த கஜ்ஜா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்குப் பின்னால் அரசியல் இருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது ஆனால், இன்று பத்திரிகை ஒன்றில் கஜ்ஜா என்பவர் மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாகச் செயற்பட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சாதாரண பொது அறிவுக்கு அமைய இந்த சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல் தொடர்புகள் காரணமாகவே விசாரணைகளுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளது.  எனினும் எந்தவொரு நபரும் தாம் செய்ததாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இது ஏனைய

கஜ்ஜா அடையாளம் காணப்பட்டுள்ளார் Read More »

ஆயிரம் வாகனங்களை காணவில்லை

உள்ளூராட்சி சபைகளில் 1,000 இற்கும் அதிக வாகனங்களை காணவில்லை – இருந்தும் கையளிக்காவிடில் உரியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மாகாண சபைகள் மற்றும் நகர சபை,பிரதேச சபைகள்  உள்ளிட்ட உள்ளூராட்சி சபை  நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ளதாக  பொது நிர்வாக,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற் போன வாகனங்கள் தொடர்பில் தகவல்களைக் கூட அறிந்து கொள்வதற்கு முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைச்சு சில

ஆயிரம் வாகனங்களை காணவில்லை Read More »

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு- பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (03) இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருட்டு- பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை Read More »

மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம்ஜூன் மாதம் ?

தேர்தல் நடத்தப்படாது கடந்த 10 ஆண்டுகளாக ஆளுநர்களின் நிர்வாகத்தில் இயங்கி வரும்மாகாணங்களின் மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக மாகாணசபைகள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் உறுதிப்படுத்தியுள்ளார். மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தனதுவேட்பாளர் தெரிவு குறித்த ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம்ஜூன் மாதம் ? Read More »

திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் மலேசியா பயணம்

சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி – 2025Category – I இல் Sooriyakumar Ashvanttமலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட  பரீட்சையில் தெரிவாகி மலேஷியா சென்ற தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி மாணவனை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பல வெற்றிகளை பெற்று சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம். முயற்சிகள் தோற்பதில்லை பயிற்சிகள் அழிவதில்லை) வாழ்க வளமுடன்.தியாகபிரபா

திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் மலேசியா பயணம் Read More »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொழும்பில் கூலி வீடு ஒன்றுக்கு செல்கிறார்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை கட்டுப்படுத்தும்திட்டத்துக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கொழும்பு அரச வதிவிடத்தை விட்டுவிட்டு கொழும்பில் கூலி வீடு ஒன்றுக்கு செல்ல உள்ளதாக அவரது தரப்பு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொழும்பில் கூலி வீடு ஒன்றுக்கு செல்கிறார் Read More »

தமிழ்நாட்டு முதல்வர்

”இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கச்சதீவை மீட்பதே” — தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் “இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையேயான தொடர்ச்சியான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில், கச்சதீவை மீட்டெடுப்பதே ஒரே வழியாகும்.” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்:

தமிழ்நாட்டு முதல்வர் Read More »

அரபுலக ஆட்சியாளர்கள்

அரபுலக ஆட்சியாளர்கள், அரபு மக்களை விட காசா போருக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பியவர்களில் ஸ்பெயின் மக்களின் பங்களிப்பு மகத்துவமானது.  காசாவில் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பார்சிலோனா மக்கள் நாளை வீதிகளில் பேரணி நடத்துமாறு, பயிற்சியாளர் பெப் கார்டியோலா, வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அரபுலக ஆட்சியாளர்கள் Read More »

துருக்கிய வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த திட்டத்துக்கு ஹமாஸ் நேற்று று (ஒக்டோபர் 3) வழங்கிய பதில், காசாவில் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பிராந்தியத்திற்கு தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்கவும், நீடித்த அமைதியை நிலைநிறுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும் என நாங்கள் கருதுகிறோம். காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை தரப்புகள் விரைவாகத் தொடங்க வேண்டும். அதேபோல் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இரு-மாநில தீர்வு நடைமுறைக்கு வர வேண்டும்.

துருக்கிய வெளியுறவு அமைச்சகம் Read More »

Scroll to Top