Nifaris

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. […]

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம் Read More »

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொலவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பிரதேசத்தில் இன்று (17) காலை முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிடப்பட்டபோது, 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அங்குலானை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, அவரது மனைவியிடமிருந்து மேலும் 10 கிராம்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது Read More »

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை!

பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில் உள்ள மரக்கறிச் சந்தை மற்றும் மீன் சந்தை என்பவற்றுக்கு வருகை தருவது வழக்கம். எனினும், இன்றைய தினம் (16) மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுச்

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை! Read More »

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், நாளையே (17) கல்விச் செயலாளர் ஊடாக அந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் எனக் கூறினார். அதன்படி, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாகச் செயலாளர் ஊடாக

போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை Read More »

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல் Read More »

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. குறித்த விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியது. பின்னர் அந்தப் படகு மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும்,

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து Read More »

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இரண்டு இடங்கள் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் இடமொன்றை பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றிவளைத்துள்ளது. இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பல குறியீட்டு ஸ்டிக்கர்கள் அடங்கிய தொகுதியைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் போதைப்பொருள் பொட்டலங்களை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீடுகளை உருவாக்கும் இடம் கல்கிசையில் இருப்பதாக பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இரண்டு இடங்கள் சுற்றிவளைப்பு Read More »

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார். அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன’ சிறிது

யாழில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு Read More »

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை Read More »

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இன்று (10) ராஜகிரிய, கொத்தட்டுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே இந்த வாசனைத் திரவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த வாசனைத் திரவியங்கள் டுபாயில் இருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு Read More »

நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் 8 வயது பிள்ளை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (08) மாத்தளை, தனமல்வில, வெலிகந்த மற்றும் கொட்டவில பொலிஸ் பிரிவுகளில் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியால் பயணித்த பிள்ளை ஒன்றின் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த 8 வயது பிள்ளை வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி Read More »

ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு தடுப்பு காவல்

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அநுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்திற்கு நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது

ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு தடுப்பு காவல் Read More »

Scroll to Top