செய்திகள்தேசிய அடையாள அட்டை விநியோகம் தடையின்றி

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இந்த அடையாள அட்டைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அத்துடன், தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தினந்தோறும் திணைக்களத்துக்கு வருகை தரும் ஏனைய பொது விண்ணப்பதாரிகளுக்கும் தடையின்றி தொடர்ச்சியாக தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த முழுமையான அறிவிப்பு […]

செய்திகள்தேசிய அடையாள அட்டை விநியோகம் தடையின்றி Read More »

போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்

போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று (1) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, நாட்டின் மேற்குப் பகுதியில் ஆழ்கடலில் வைத்து போதைப்பொருள் தொகையுடன் இந்த நெடுநாள் மீன்பிடிப் படகை கைப்பற்றினர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த மீன்பிடிப் படகின் உரிமையாளர் நேற்று மாலை காலி பிரதேசத்தில்

போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல் Read More »

ஹம்பாந்தோட்டையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை மின்சார வேலிக்கு அப்பால் நகர்த்தி, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், காட்டு யானைகளின் உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இது திட்டமிடப்பட்டுள்ளது. வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உட்பட சுமார் 2,000 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம் Read More »

திருகோணமலையில் அதிர்ச்சி! – இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (01) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த சிப்பாயின் உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் குருநாகல், மந்துராகொட, கொட்டுஹேனையைச் சேர்ந்த 30 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும்

திருகோணமலையில் அதிர்ச்சி! – இராணுவ சிப்பாய் உயிரிழப்பு Read More »

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி Read More »

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் Read More »

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம் 137 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் குஷ் உள்ளிட்ட பல போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 31 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது Read More »

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் Read More »

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும்

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு Read More »

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம் Read More »

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர், மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது Read More »

கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (11) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து Read More »

அதிகளவான வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது

தீர்வை வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் 5 பேர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக காலியில் இன்று (11) மாலை நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 95 மூட்டைகளில் சுமார் 19,000 சிகரெட்டுகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூபாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர்கள் போத்தல மற்றும் மிலிதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று

அதிகளவான வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது Read More »

Scroll to Top