அயல்வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு. பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) ஏற்பட்ட தகராறு பின்னர் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவருக்கும் அவருடைய முன் வீட்டில் […]

Read More »

தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக தனது பங்கை கத்தார் நிறுத்தி வைத்துள்ளது கத்தாரில் உள்ள உங்கள் இராணுவ தளங்கள் ஏன் எங்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கவில்லை என்றும் கத்தார் அமெரிக்காவைக் கேள்வி எழுப்புகிறது. கத்தார் $1.5 டிரில்லியன் ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று அமெரிக்க இராணுவ தளங்களை வெளியேற அழுத்தம் கொடுக்கலாம். முஹீத் ஜீரன்சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்10 செப்டம்பர் 2025

Read More »

கொழும்பு பல்கலைக்கழக மாணவி (22 வயது) நெத்மி பிரபோதா விபத்தில் உயிரிழந்துள்ளார். தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். மாலையில் பேருந்து இல்லாததால், அவரை நான் என் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். மகள் தலைக்கவசம் அணியவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்தது. பின்னால் வந்த ஒரு வேன் திடீரென வலதுபுறம் திரும்பி முச்சக்கர வண்டியைக் கடந்து சென்றது.

Read More »

வளர்ந்து வரும் போலந்து சுற்றுலா

வளர்ந்து வரும் போலந்து சுற்றுலா சந்தையை ஈர்ப்பதற்காக “விஸ்பர்ஸ் ஆஃப் சிலோன்” ஐ அறிமுகப்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தி பார்ன் ஹவுஸ் ஸ்ரீ லங்காவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த முயற்சி, ஆடம்பர மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள விருந்தோம்பலுடன் உள்நாட்டு பழக்கவழக்கங்களை கலப்பதன் மூலம் உயர்நிலை ஐரோப்பிய திருமணங்களுக்கான முதன்மையான இடமாக இலங்கையை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

வளர்ந்து வரும் போலந்து சுற்றுலா Read More »

SA20 ஏலத்தில் ஹாலம்பகே உட்பட இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களான விஷேன் ஹாலம்பகே மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர், Rajasthan Royals சொந்தமான South African க்க SA20 உரிமையாளரான Paarl Royals தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ஹாலம்பகே R200,000 (USD 11000) க்கு வாங்கப்பட்டார், அதே நேரத்தில் மலிங்கா R1 மில்லியன் (USD 55,000) வாங்கினார். IPL இன் ராஜஸ்தான் ராயல்ஸின் சகோதரி அணியாக செயல்படும் பார்ல் ராயல்ஸ் அணி, 2026 சீசனுக்கான அணியை உருவாக்கும் ஒரு பகுதியாக இரட்டை

SA20 ஏலத்தில் ஹாலம்பகே உட்பட இரண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். Read More »

ஆப்பிள் இன்று அதன் ஏர்போட்ஸ் ப்ரோ வயர்லெஸ் ஹெட்ஃபோன்களின் புதிய பதிப்பை நேரடி மொழி மொழிபெயர்ப்புடன் அறிமுகப்படுத்தியது.

ஆப்பிள் இன்று அதன் ஏர்போட்ஸ் ப்ரோ வயர்லெஸ் ஹெட்ஃபோன்களின் புதிய பதிப்பை நேரடி மொழி மொழிபெயர்ப்புடன் அறிமுகப்படுத்தியது. Read More »

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். நேற்று (09)  இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடக்காது என உறுதியளித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி டிரம்ப், கத்தாரை ஒரு வலுவான கூட்டாளியாகவும், நண்பராகவும் பார்க்கிறார். இஸ்ரேலினால் தாக்கப்பட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. Read More »

அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத்து ஏவுகணைகளை வீசி நடத்திய துல்லியத் தாக்குதல் படுதோல்வியில் முடிந்தது.இஸ்ரேல் குறி வைத்த அனைவருமே உயிர் தப்பினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.இந்த வகையில் இது இஸ்ரேலின் அப்பட்டமான தோல்வியாகும். இங்கு எழுகின்ற கேள்வி ஒன்றே. இஸ்ரேல் இப்படி ஒரே சமயத்தில் கஸ்ஸா, மேற்குக் கரை, சிரியா, ஏமன், கத்தார் என தாக்கிக் கொண்டிருக்கின்றதே, அரபு நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? தங்களுடைய முறை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்களா? என்று அல்ஜஸீரா பத்திரிகையாளர் அல்மன்சூர் கேள்வி எழுப்பியிருப்பது பொருள் பொதிந்தது மட்டுமல்ல, இதயத்தைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று கனமானதும் வலி நிறைந்ததுமாகும். அல்லாஹ் போதுமானவன். அவனே மிகச் சிறந்த புரவலன். காப்பாளன்.- Azeez Luthfullah –

அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத்து ஏவுகணைகளை வீசி நடத்திய துல்லியத் தாக்குதல் படுதோல்வியில் முடிந்தது.இஸ்ரேல் குறி வைத்த அனைவருமே உயிர் தப்பினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.இந்த வகையில் இது இஸ்ரேலின் அப்பட்டமான தோல்வியாகும். இங்கு எழுகின்ற கேள்வி ஒன்றே. இஸ்ரேல் இப்படி ஒரே சமயத்தில் கஸ்ஸா, மேற்குக் கரை, சிரியா, ஏமன், கத்தார் என தாக்கிக் கொண்டிருக்கின்றதே, அரபு நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? தங்களுடைய முறை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்களா? என்று அல்ஜஸீரா பத்திரிகையாளர் அல்மன்சூர் கேள்வி எழுப்பியிருப்பது பொருள் பொதிந்தது மட்டுமல்ல, இதயத்தைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று கனமானதும் வலி நிறைந்ததுமாகும். அல்லாஹ் போதுமானவன். அவனே மிகச் சிறந்த புரவலன். காப்பாளன்.- Azeez Luthfullah – Read More »

*🛑நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை*நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

*🛑நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொலை*நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read More »

திருகோணமலையில் தனியார் காணியில் மிதிவெடி மீட்பு!

https://facebook.com/pmdnews திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – செல்வநகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி ஒன்று இன்று செவ்வாய்கிழமை (09) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வெளியில் தெரியும் வகையில் புதைக்கப்பட்ட நிலையில் மிதிவெடி இருப்பதைக் கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பின்னர் பொலிஸார், கிராம உத்தியோகத்தர்,மிதிவெடி அகற்றும் பிரிவினர் இன்று மிதிவெடி இருக்கும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அத்தோடு

திருகோணமலையில் தனியார் காணியில் மிதிவெடி மீட்பு! Read More »

ஜனாதிபதி அனுரகுமாரவின் முதல் வருடத்தில் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை  ஈர்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். “கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை, இலங்கை 1.015 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இவை கையெழுத்திடப்பட்ட அல்லது உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல, ஆனால் நிறைவேற்றப்பட்ட நிதிகள்” என்று அவர் கூறினார். இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) உண்மைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று அமைச்சர் ரத்நாயக்க  இன்று (09)

Read More »

Scroll to Top